News Just In

6/08/2021 07:02:00 AM

கொரோனா தொற்றால் மேலும் 26ஆண்களும் 21பெண்களும் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 1789ஆக அதிகரிப்பு...!!


இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்த மரணங்கள் கடந்த மே 17ஆம் திகதி முதல் ஜூன் ஆறாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 26 ஆண்களும் 21 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 1789ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



No comments: