News Just In

6/10/2021 02:56:00 PM

மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 125 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு...!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொவிட் 19 அச்சம் காரணமாக அமுல்செய்யப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வெள்ளிக்கிழமை (10) வழங்கப்பட்டன.

சொமஸ்கன் சபையின் இலங்கைக்கான மேலாளர் அருட் தந்தை ஞா.மகிமைதாஸ் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 125 இந்து மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அரிசி, சீனி, கோதுமை மா, கருவாடு, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இப்பொதிகளில் காணப்பட்டன

No comments: