News Just In

6/11/2021 09:24:00 PM

மட்டக்களப்பில் இன்று 103பேருக்கு கொரோனா தொற்று- கொரோனா தடுப்பூசி இதுவரை 11975பேருக்கு செலுத்தப்பட்டது...!!


மட்டக்களப்பில் இன்று(11) 103பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும், 2827 கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03பேருக்கும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31பேருக்கும்
பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும்
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருக்கும்
கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குமாக
இன்று மாத்திரம் 103 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசியானது மட்டக்களப்பில் இன்று நான்காவது நாளாக ஏற்றப்பட்டு வருகின்றது. அதன்படி மொத்தமாக 11975 தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளதாகவும் இதில்,
2021.06.08 அன்று 1351 தடுப்பூசிகளும்
2021.06.09 அன்று 3476 தடுப்பூசிகளும்
2021.06.10 அன்று 4321 தடுப்பூசிகளும்
2021.06.11 அன்று 2827 தடுப்பூசிகளை ஏற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: