News Just In

6/02/2021 06:00:00 PM

மட்டக்களப்பு- கோறளைப்பற்று மத்தியில் அன்டிஜன் பரிசோதனை- 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு- கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை அறுபத்தாறு (66) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எட்டு (08) நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்தவர்கள், சட்டவிதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என அறுபத்தாறு (66) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் இருபத்தேழு (27) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது.

குறித்த அன்டிஜன் பரிசோதனை நிகழ்வில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.









No comments: