News Just In

5/29/2021 11:52:00 AM

அரசாங்க வேலை தேடுவோருக்கு ஓர் அரியவாய்ப்பு- கிராம சேவகர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன...!!


அரச தொழில் ஒன்றை பெற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இன்றே ஆரம்பியுங்கள். உங்கள் விடாமுயற்சியே உங்களது வெற்றியை தீர்மானிக்கும்.
கிராம சேவகர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமை:-
தாய் மொழி மற்றும் கணிதம் உட்பட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 4 பாடங்ளில் சி சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்

மற்றும்
க.பொ.த உயர் தரத்தில் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்ந்து அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு முறை:- போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு

பரீட்சையின் ஒவ்வொரு வினாத்தாளிலும் 40 வீதத்திற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்றவர்களில் பிரதேசத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு கருத்திற் கொள்ளப்படும்

நிபந்தனை:- விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் ஆகக்குறைந்தது 3 வருடங்கள் வசிக்க வேண்டும்.

வாக்காளர் பெயர்பட்டியல் மற்றும் கிராம சேவகர் சான்றிதழ் மூலம் வதிவிடம் உறுதிப்படுத்தப்படவேண்டும்

வயது எல்லை:- 21 க்குக் குறையாது 35க்கு மேற்படாதிருக்க வேண்டும்

சம்பளத்திட்டம் :- ரூ 28940-10 x 300-11 x 350-10 x 560-10 x 660-ரூ47990

விண்ணப்ப முடிவுத் திகதி 2021-06-28

No comments: