கிராம சேவகர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித் தகைமை:-
தாய் மொழி மற்றும் கணிதம் உட்பட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 4 பாடங்ளில் சி சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்
மற்றும்
க.பொ.த உயர் தரத்தில் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்ந்து அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு முறை:- போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு
பரீட்சையின் ஒவ்வொரு வினாத்தாளிலும் 40 வீதத்திற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்றவர்களில் பிரதேசத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு கருத்திற் கொள்ளப்படும்
நிபந்தனை:- விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் ஆகக்குறைந்தது 3 வருடங்கள் வசிக்க வேண்டும்.
வாக்காளர் பெயர்பட்டியல் மற்றும் கிராம சேவகர் சான்றிதழ் மூலம் வதிவிடம் உறுதிப்படுத்தப்படவேண்டும்
வயது எல்லை:- 21 க்குக் குறையாது 35க்கு மேற்படாதிருக்க வேண்டும்
சம்பளத்திட்டம் :- ரூ 28940-10 x 300-11 x 350-10 x 560-10 x 660-ரூ47990
விண்ணப்ப முடிவுத் திகதி 2021-06-28
No comments: