News Just In

5/12/2021 11:46:00 PM

மட்டக்களப்பு- செங்கலடி மாவடிவேம்பில் விபத்து- வேன் வண்டி நொறுங்கியது


(செங்கலடி நிருபர் சுபா)
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வேன் வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள்து.

இன்று இரவு 09.15 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமும் சாரதியின் தூக்க கலக்கமுமே இவ் விபத்திற்கு காரணமாகவிருந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வேன் வண்டி வீதியோர மின் கம்பத்தில் மோதியுள்ளது. எனினும் வான் வண்டியில் பயணித்த இருவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.




No comments: