புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கணவனை இழந்த குடும்பத் தலைவிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (9) இடம்பெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை மற்றும் அல்மா அமைப்பு ஆகியவை இணைந்து இத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் பிரதான நிகழ்வு கல்குடா தொகுதி வை.எம்.எம்.ஏ.பேரவையின் தலைவர் ஏ.எல்.பசீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.ஜகாப்தீன், நில அளவை உதவி உத்தியோகத்தர் எம்.ஏ. இஸ்மாயில், போசகர் மெளலவி எம்.ஐயூப், செயலாளர் எம்.எல். அபூ லயீஸ் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
No comments: