News Just In

5/14/2021 05:54:00 PM

பயணத்தடைக்கும் மத்தியில் ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது...!!


நாடு முழுவதும் இன்று (14) பயணத் தடை  அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் அதே இடத்தை சேர்ந்த 39 வயது குடும்பஸ்தர் ஒருவர் நட்டாங்கண்டல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நட்டாங்கண்டல் பொலிஸ் பரிசோதகர் விமலவீரவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் படி குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கு மதுபானங்களை விற்கும் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: