News Just In

5/14/2021 05:46:00 PM

தொழிநுட்ப பிரிவில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் முகம்மது சமீர் சாதனை!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முகம்மது சமீர் தொழிநுட்பப் பிரிவில் 2 A, 1 B பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரம் மூத்தவன் போடியார் வீதியைச் சேர்ந்த ஏ.எல்.முகம்மது முத்து, எம்.ஐ.லத்தீபா தம்பதிகளின் புதல்வராவார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ள சமீர் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் 7 A, 2C பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ள மாணவனுக்கு பாடசாலை சமூகம் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.

No comments: