News Just In

5/07/2021 11:56:00 AM

பாடசாலைகள், மேலதிக வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு...!!


இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல்,அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்திற்கு இணங்க சகல கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: