News Just In

5/07/2021 12:12:00 PM

மட்டக்களப்பு- சவுக்கடி கரையோரப் பிரதேசத்தில் சட்டபூர்வ காணி ஆவணம் வழங்ககப்படவேண்டுமெனக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்று- சவுக்கடி கரையோரப் பிரதேசத்தில் அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியமர்ந்துள்ளவர்கள் தமக்கு சட்டபூர்வ ஆவணம் வழங்ககப்படவேண்டுமெனக்கோரி 06.05.2021 கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரதேசத்திலுள்ள அரசாங்க காணிகளில் கடந்தசில வருடங்களுக்கு முன்னர் காடுவெட்டிää குடிசையமைத்து 24 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன.

இவர்கள் சட்டபூர்வ அனுமதிப்பத்திரம்கோரி பல தடவைகள் விண்ணப்பம் செய்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே இச்சட்டவிரோத குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் என். வில்வரெத்தினம் கருத்துத் தெரிவிக்கையில் ... குடியிருப்பதற்கு காணியற்றவர்கள் நீண்டகாலமாக அரசாங்க காணிகளில் வீடமைத்து குடியிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சட்டபூர்வ ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த வகையில் இக்குடியிருப்பாளர்களுக்கு சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.





No comments: