News Just In

5/02/2021 09:51:00 AM

இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம்- கல்வி அமைச்சு!!


இலங்கையில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப் பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடையமுடியும்.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: