News Just In

5/23/2021 12:46:00 PM

தம்பலகாமம் குளத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு...!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை தம்பகாமம் இன்னாசி குளப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை(23.05.2021) மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் தம்பகாமம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பொன்னையா வனஜா என்பவர் என முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் இன்றுகாலை குறித்த பெண்ணின் சகோதரரால் குறித்த பெண்ணின் சடலம் குளத்தில் இணங்கானப்பட்டுள்ளதாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த பளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments: