News Just In

5/15/2021 06:38:00 PM

சொந்த வாகனங்களில் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்...!!


இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த வாகனங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பமாக சொந்த வாகனங்களில் செல்லும் போது குடும்ப அங்கத்தவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக தேவையில்லை என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: