News Just In

5/06/2021 08:13:00 AM

மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல்...!!


இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டம்கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனங்கம்மான கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுபத்ர லங்கா கிராம உத்தியோகத்தர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: