News Just In

5/06/2021 01:20:00 PM

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க தடை- விமான சேவைகளும் இடை நிறுத்தம்!!


இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு நபருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: