கரடியனாறு புதிய பராமரிப்பு நிலையத்திற்கு தேவையான 6 மலசலகூடம், 6 குளியலறை வசதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க .கருணாகரனின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பை தலைமையகமாக கொண்டு இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான AMCOR நிறுவனத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பராமரிப்பு நிலையமானது இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கண்கானிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 14 ஆம் திகதி பராமரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக கரடியனாறு வைத்தியசாலையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அரச சார்பற்ற நிறுவனங்களிடம் அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இவ்வசதிகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய நிறுவனங்களில் LIFT, WORLD VISION ஆகிய தொண்டு நிறுவனங்களும் பராமரிப்பு நிலையத்திற்கான சில உதவிகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறைவுறும் தருவாயில் உள்ள பராமரிப்பு நிலையமானது விரைவில் வைத்தியசாலை பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
No comments: