News Just In

5/23/2021 06:31:00 PM

50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானம்...!!


நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதன் ஊடாக சுமார் 3,500 கட்டில்களை கொவிட் சிகிச்சைக்காக உட்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றுபவர்களுக்கு கொவிட் சிகிச்சை தொடர்பில் பயிற்சி வழங்கவுள்ளதுடன் அவர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments: