News Just In

5/16/2021 06:16:00 PM

கடமையாற்றிய 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- வைத்தியசாலைக்கு பூட்டு...!!


புத்தளம் – மாராவில் ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு மற்றும் சத்திர மற்றும் பிரசவ அறை ஆகியன தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பிரிவுகளில் கடமையாற்றிய 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய 100 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையை அடுத்தே 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றறுதி செய்யப்பட்டவர்கள் தாதிகள், வைத்தியர்கள், மற்றும் சிற்றூழியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: