News Just In

5/16/2021 09:54:00 AM

பயணத்தடை அமுலில்- 20 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து வீடு புகுந்து தாக்குதல்...!!


யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

மேலும் குறித்த குழுவினர் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி உள்ளிட்டவற்றையும் சேதப்பட்டுத்திச் சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய குழு மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: