News Just In

5/28/2021 08:23:00 PM

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று- இன்று மேலும் 112பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(28) வெள்ளிக்கிழமை மாத்திரம் 112பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில்,
மட்டக்களப்பு பிரதேசம்:- 22பேர்
களுவாஞ்சிக்குடி பிரதேசம்:- 17பேர்
வாழைச்சேனை பிரதேசம்:- 07பேர்
காத்தான்குடி பிரதேசம்:- 19பேர்
கோறளைப்பற்று மத்தி:- 05பேர்
செங்கலடி பிரதேசம்:- 02பேர்
ஏறாவூர் பிரதேசம்:- 05பேர்
பட்டிப்பளை பிரதேசம்:- 05பேர்
வவுணதீவு பிரதேசம்:- 05பேர்
கிரான் பிரதேசம்:- 11பேர்
வெல்லாவெளி பிரதேசம்:- 13பேர்
ஓட்டமாவடி பிரதேசம்:- 01பேர்

ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அண்மைக்காலங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, முகக்கவசங்களை முறையாக அணிந்து ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொது மக்களை அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: