இந்த ஆண்டுக்கான IPL தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் IPL தொடரை சிக்கல்கள் ஏற்படும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
எனினும், IPL போட்டிகளை நடத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என மும்பை கிரிக்கெட் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், IPL தவிர்ந்த ஏனைய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: