மட்டக்களப்பு மாவட்ட ஹரிதாஸ் எகட் நிறுவனத்தின் பல் சமய சமாதான ஒன்றியத்தினால் இரங்கல் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலே மத்தான பணியாற்றிய மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை எம்மை விட்டு சென்று விட்டார் என்ற செய்தி கேட்டு முழு இலங்கை வாழ் பல் இன மக்களும் வேதனையடைகின்றனர். ஈழ மக்கள் வாழ்க்கையில் மாறத் தடம் பதித்த இவரது சேவை உலக மக்கள் அனைவரினதும் கவனத்தில் ஈர்க்கப்பட்டதே. அது போல முழு ஈழ மக்களுக்காகவும் இனம் மதம் மொழிக்கு அப்பால் சென்று மனித உயிர்கள் வதைக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.
மனித சமுதாயத்துக்கே இளைக்கப்படுகின்ற அநீதிக்கெதிராகக் குரல் கொடுத்தவர். சமாதானத்தை நிலைத்திருக்கச் செய்வதற்குத் தொடர்ந்து பணியாற்றியவர்.
தனித்துவமான இடத்தை மக்கள் மனத்தே கொண்டிருந்தவர். கலாநிதிப்பட்டத்தைப் பெற்றிருந்தாலும் அதனை வெளிக்காட்டாதவர். மனித உரிமைகள் இலங்கையில் மீறப்படாதிருக்க வேண்டும் என்றும் சம நீதியும் சம வளப் பகிர்வும் இலங்கையில் நிலை கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மக்களின் விடுதலையும், தமிழ் மக்களின் அபிலாசைகளும் அரசினால் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியவர்.
மேலும் அவர் தனவாழ்க்கை நடை முறையிலும் வாழ்ந்து காட்டியவர், ஏழை மேல் இரக்கமும் கரிசனையும் கொண்டு மன வலிமையுடனே நடந்தேறிய யுத்தத்திற்கும் குமுறியெழுந்த இரத்தக் குமிழிகளுக்கும் எதிரானவர் தான் என நிருபித்தவர். இவ்வாறான பெருந்தகை எங்களை விட்டுச் சென்றாலும் அன்னாரின் ஆத்மா திருநிலை நின்று எங்களோடு நிலைத்திருக்கும் என்பதே உண்மையாகும்.
என்றென்றும் வேதனையுறும், மட்டக்களப்பு பல் சமய சமாதான ஒன்றியத்தின் உறுப்பினர்கள்.
No comments: