News Just In

4/20/2021 12:50:00 PM

புதுப்பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீதேவி புகையிரதம்...!!


கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் ஸ்ரீ தேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 பெட்டிகள் M11 locomotive இன்ஜினுடன் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவை Air brake system கொண்ட ரயில் பெட்டிகளாகும். இதில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 2 ஆம் 3 ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

நேற்று மதியம் 03.55க்கு புறப்பட்ட இந்த ரயில் காங்கேசன்துறைக்கு 22.29 இற்கு சென்று இன்று காலை அதே ரயில் காங்கேசன்துறையில் இருந்து 03.30 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.00 மணிக்கு கோட்டைக்கு புறப்பட்டது.






No comments: