News Just In

4/21/2021 04:42:00 PM

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி திருகோணமலை பிரதான பீச் பிரதேசத்தில் நடைபெற உள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டுதலின்படி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பல போட்டிகளும் நடைபெறவுள்ளன.

ஆண்,பெண் இரு பாலாரிற்குமான சைக்கிள் ஓட்டம்,மரதன் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளோர் தமது பிரதேச செயலகத்தில் அல்லது மாவட்ட செயலகத்தில் உரிய விண்ணப்ப படிவங்களைப்பெற்று பூர்த்தி செய்து இம்மாதம் 24ம் திகதிக்கு முன்னர் விண்ணப்ப படிவங்களை கையளிக்க வேண்டும்.

அத்துடன் குறித்த இரு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளோர் தமது உடல் நிலை பற்றிய வைத்திய சான்றிதழை கொண்டுவரல் வேண்டும். சைக்கிள் ஓட்ட போட்டியில் முதலிடம் பெறும் ஆண், பெண் இருபாலருக்கும் 50000ரூபா பணப்பரிசுடன் பைசிக்கள் ஒன்றும் மரதனில் முதலிடத்திற்கு 50000பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.அத்துடன் அடுத்து வருபவர்களுக்கும் பெறுமதிமானதும் பரிசில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னும் பல போட்டிகளும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் அனைத்திலும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

No comments: