News Just In

4/30/2021 01:05:00 PM

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த தெரிவுப்பரீட்சைகள் ஒத்திவைப்பு!!


நூருள் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நிலையத்தினால் 02.05.2021 ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆங்கில டிப்ளோமா பாடநெறி மற்றும் ஆங்கில சான்றிதழ் பாடநெறி (Diploma in English and Certificate in English 2019/2020) ஆகிய கற்கை நெறிகளுக்காக மாணவர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சைகள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என வெளிவாரி பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலைய உதவிப்பதிவாளர் அறிவித்துள்ளார்.



No comments: