News Just In

4/04/2021 09:02:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது!!


எப்.முபாரக்
போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சால வீதியைச் சேர்ந்த 36, 45 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரு பெண்களை கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனையின் வழிகாட்டலில் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து 500 மில்லி கிராம் ஹெரோயின், 550 மில்லி கிராம் கேரளா கஞ்சா, மற்றும் 60 போதைமாத்திரைகளும் மற்றைய பெண்ணிடமிருந்து 17 கிராம் 330 மில்லி கிராம் கேரளா கஞ்சா, 25 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: