News Just In

4/06/2021 08:32:00 AM

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை திடீர் மரணம்!!


குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார்.

வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று (06) இரவு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments: