News Just In

4/06/2021 08:55:00 AM

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விசேட வேலைத்திட்டம்!!


இலங்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில மது போதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படுகின்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: