News Just In

4/21/2021 10:15:00 AM

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தூபியில் அஞ்சலி!!


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

அதன்படி, மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இன்று காலை 7 மணிக்கு மாநகரசபை ஆணையாளர் தயாபரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், 70இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments: