News Just In

4/05/2021 08:33:00 AM

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் பிறைந்துரைச்சேனை பகுதியில் கைது!!


(எஸ்.எம்.எம்.எம்.முர்ஷித்)

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை இன்று (04.04.2021) பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து பிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புலனாய்வு பிரிவினரும் வாழைச்சேனைப் பொலிஸாரும் சிறுவர் மகளிர் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் உதவியுடன் இரு பெண்களையும் பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து 500 மில்லி கிராம் ஹெரோயின் 23550 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 60 போதை மாத்திரைகளும் மற்ற பெண்ணிடமிருந்து 17330 மில்லி கிராம் ஹெரோயின் 25 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புபட்டோர் கொள்வனவு செய்தோர் தொடர்பிலும் மேலதிக விசாரனைகள் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதுடன் சம்பந்தப்பட்டோரைக் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 36 மற்றும் 45 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: