News Just In

4/25/2021 08:05:00 AM

தண்டவாளத்தில் சென்ற வயோதிபர் ரயிலில் மோதுண்டு வீசி எரியப்பட்ட கொடூரம்!!


கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (24) காலை நடைபெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த டேவிட் பிரபாகரன் வயது (65 எனவும்) பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,...

ரயில் தண்டவாளத்தில் வயோதிபர் சென்று கொண்டிருந்ததாகவும் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் இவரை மோதிய நிலையில் வீசி எரியப்பட்டதையடுத்து இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,பி.சி.ஆர் அறிக்கையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: