News Just In

4/24/2021 04:31:00 PM

கொரோனா தொற்று தாக்கம்- கதிர்காம ஆலய நிர்வாகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...!!


அத்தியாவசிய யாத்திரை மற்றும் வழிபாடுகளுக்காக மாத்திரம் கதிர்காமம் புனித ஸ்தலத்திற்குள் பிரவேசிக்குமாறு ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

எனவே அத்தியாவசிய யாத்திரையினை மேற்கொள்வோர் கட்டாயமாக சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி வழிபாடுகளில் ஈடுப்படுமாறு கதிர்காம ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: