News Just In

4/29/2021 07:20:00 PM

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு எதிரான வழக்கினை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை!!


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றில், ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில், நாளைய தினம் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்முனை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: