News Just In

4/29/2021 06:53:00 PM

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- கடந்த 24 மணி நேரத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில், திருகோணமலையில் 21 பேருக்கும், தெஹியத்தகண்டியவில் 15 பேருக்கும், உஹனையில் 13 பேருக்கும், உப்புவெளியில் 11 பேருக்கும், பதியத்தளாவையில் 07 பேருக்கும், அம்பாறையில் 6 பேருக்கும், மட்டக்களப்பில் 6 பேருக்கும், கிண்ணியாவில் 05 பேருக்கும், மூதூரில் 04 பேருக்கும், களுவாஞ்சிக்குடியில் 03 பேருக்கும், குருஞ்சாங்கேனியில் 03 பேருக்கும், ஏறாவூரில் 03 பேருக்கும், கந்தளாயில் 03 பேருக்கும், சேருவிலையையில் ஒருவருக்கும், தமனையில் ஒருவருக்கும், வாழைச்சேனையில் ஒருவருக்கும், பதவிசிரிபுரத்தில் ஒருவருக்கும், செங்கலடியில் ஒருவருக்கும், ஆரையம்பதியில் ஒருவருக்கும், காத்தான்குடியில் ஒருவருக்குமாக மொத்தம் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: