News Just In

4/24/2021 06:42:00 AM

வளிமண்டலத்தில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியாகியது!!


மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (24) காலையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், மத்திய, ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது பிற்பகல் 2 மணிக்கு பின்பு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று 100 மில்லி மீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: