மட்டக்களப்பு- கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களின் காணிகளை அளவிடும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பலர் உறுதிகள் வழங்கப்படாத நிலையில் மிக நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு, உறுதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நில அளவைகள் திணைக்களத்தால் அரச நில அளவையாளர் எம்.ஐ.சபீரின் தலைமயிலுள்ள குழுவினர்,இவ்வாறு நில அளவை திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments: