News Just In

4/23/2021 09:40:00 AM

28 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் இருந்து விடுவிக்கபடும் ஒரு பகுதி!!


யாழ்.திருநெல்வேலி - பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்படவுள்ளது.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக, யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அரச அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரான இதுவரையான காலத்தில் ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

No comments: