News Just In

4/10/2021 10:35:00 PM

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் 21 வயது இளம் குடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை!!


மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் 11 மாத ஆண் குழந்தையொன்றின் தாயான 21 வயதுடைய தெய்வேந்திரன் தெய்வலோஜினி எனும் இளம் பெண் ஒருவரே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கணவரின் வருமானம் கானாததால் அவரோடு முரண்பட்ட நிலையில் தனது குழந்தையை தூக்குவதற்கு கூட கணவருக்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்த நிலையில் நேற்று மாலை குழந்தையை தூக்குவதற்காக கணவர் சென்றபோது கொடுக்க மறுத்ததால், மனைவியுடன் கணவர் முரண்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் இருந்துள்ளார்.

இரவுச்சாப்பாட்டை உட்கொள்ள கணவர் அழைத்த போது, எனக்கு பசியில்லை, நீங்க சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு நித்திரைக்கு சென்றுள்ளார். கணவரும் இரவுச்சாப்பாட்டை உட்கொண்டு விட்டு மனைவி குழந்தை ஆகியோர் உறங்கிய இடத்திலேயே உறங்கியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த தந்தைக்கு, தனது நெஞ்சில் கைவைத்து குழந்தை அழும் சத்தம் கேட்டதும், எழுந்து மனைவியை பார்த்தபோது காணாத நிலையில் அன்னார்ந்து பார்த்தபோது மின்விசிறியில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மனைவி மரணித்திருப்பதை அவதானித்துள்ளார்.

No comments: