இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கலால் திணைக்களம் மேலும் கூறியுள்ளதாவது,
இராஜகிரியவில் அமைந்துள்ள கலால் திணைக்களத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்கள் சிலருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டமையினால், அந்த நிறுவன ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியிருந்தது.
இதனால் கலால் திணைக்களத்தின் சுற்றிவளைப்பு பிரிவு எதிர்வரும் 14 நாட்கள் வரை மூடிவைக்கப்படவுள்ளது.
இதன்போது மதுபானம்,போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் 1913 என்று இலக்கத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.
இந்த தொலைபேசி இலக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் செயற்பாட்டில் இருக்கும்.
No comments: