News Just In

4/21/2021 04:16:00 PM

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 121 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 121 பேர் இன்று (21) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரையில் 97,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 625 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: