நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ நிர்மலநாதன் மற்றும் சீறிதரன் உள்ளிட்டவர்கள் இன்று கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்படி, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ நிர்மலநாதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை. தமிழர்களுக்கு நீதிவேண்டி பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பபடும் போராட்டங்களுக்கு, பல்கலைகழக மாணவர்களின் இந்த போராட்டம் மேலும் வலுசேர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
No comments: