News Just In

3/20/2021 04:41:00 PM

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உயர் அதிகாரிகள் கல்முனைக்கு திடீர் விஜயம்!!


அரச கரும மொழியினை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்களுக்கு அத்தேவைப்பாட்டினை நிறைவு செய்யும் பொருட்டு 100,150 மற்றும் 200 மணித்தியாலங்கள் கொண்ட வதிவிடமற்ற சிங்கள வகுப்புகள் நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றன.

இச் சிங்கள வகுப்புக்களை கண்காணிப்பு செய்யும் கள விஜயம் ஒன்று மொழித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தயம்பத்தி பண்டாரா,
உதவிப் பணிப்பாளர்களான கவிந்த கருணாரத்ன மற்றும் கயந்த சம்பத் ஆகியோரும் தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மொழிவளவாளர் சிறீஸ் கந்தராஜா, பி.சந்திரகுமாரி,மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

(சர்ஜுன் லாபீர்)





No comments: