இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் நடைபெறவுள்ள சாத்வீக கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவாறு நீதிமன்ற தடை உத்தரவானது காத்தான்குடி பொலிசாரால் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களுக்கு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை பெற வேண்டி இன்று மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பொது சிவில் அமைப்புகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் தமிழர்களின் உரிமைக்கான போராட்டமாகும். வடக்கில் இந்த போராட்டம் எந்த ஒரு தடையுத்தரவும் இன்றி நடைபெற்றது. இருப்பினும் மட்டக்களப்பில் குறித்த போராட்டத்திற்கு தடைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
அதன் ஒரு பகுதியாக தனக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
No comments: