News Just In

3/14/2021 07:45:00 AM

மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமாருக்கு கெளரவம்!!


2021ஆம் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுமை மிக்க பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றத்திற்கான வலையமைப்பு மற்றும் Leo club of Cecilian's ஆகியன இணைந்து "ஆளுமை மிக்க தலைமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் ஒரு நிகழ்வினை நடாத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில் இன்று 2021.03.12 மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்களது சேவையைப் பாராட்டி,
ஆளுமை மிக்க தலைமைத்துவம் எனும் பாராட்டு சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.




No comments: