News Just In

3/13/2021 09:27:00 PM

மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்து- இருவர் படுகாயம்!!


மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (2021.03.13) மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி பகுதியிலிருந்து காத்தான்குடி பகுதியிலுள்ள U வளைவில் ( U turn ) திரும்பி மீண்டும் ஆரையம்பதி பக்கமாக செல்ல திரும்பிய சிறிய ரக கார் ஒன்றும் மோதியே குறித்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் மோட்டார் காயங்களுடனும் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் அவசர சிகிச்சைக்காகவும் மற்றவர் சிறிய காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் பாரிய சேதத்துக்கு உள்ளாக்கியத்துடன் காரின் முன்பகுதியும் பாரிய சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








No comments: