News Just In

3/16/2021 12:58:00 PM

மட்டக்களப்பு- தாழங்குடா பிரதான வீதியில் கோர விபத்து- சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயம்!!


மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (2021.03.16) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்க்கு வந்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதுண்டு பாதையை விட்டு தடம்புரண்டு குறித்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கார் செலுத்துனர் மற்றும் காரில் பயணம் செய்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: