மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.
இதன் போது குறித்த பஸ்ஸில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பஸ் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் போதே குறித்த வயோதிபர் பஸ்ஸின் இருக்கையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: