அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் கொவிட்-19 நோயை தடுப்பதற்காக கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் சில ஒவ்வாமை தன்மைகள் குறித்து அறிக்கையிடப்படுகின்றன.
குறிப்பாக இலங்கையிலும் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர், குருதி உறைதல் ஏற்பட்ட 30 பேர் தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற நிலைமைகளே காணப்படுகின்றன.
அவை சாதாரணமானவை என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் பதிவான குறித்த எண்ணிக்கையானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்தளவானது எனக் குறிப்பிடலாம் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
No comments: