News Just In

3/19/2021 12:29:00 PM

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 19 வயதான இளைஞன் கொலை!!


கிரேண்ட்பாஸ் - நவலோக விளையாட்டரங்குக்கு அருகில் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் நேற்று கொல்லப்பட்டார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 41 வயதான நபர் 19 வயதான இளைஞரை ஆயதமொன்றில் தாக்கி கொலை செய்ததாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்திருந்த சந்தேகநபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: